Saturday 30 September 2017

அசோகா அல்வா / பாசிப்பருப்பு அல்வா

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
பல வாரங்களுக்கு பிறகு ரெசிபி போஸ்ட் செய்கிறேன் , வேலை பளு காரணமாக முடியவில்லை.
அசோகா அல்வா , மிகவும் எளிதாக, சீக்கிரம் செய்யக்கூடிய அல்வா.
செய்முறை கீழே ,
சமைக்கும் நேரம் : 1 மணிநேரம்
நபர்கள் : 30 நபர்கள்  


தேவையானவை :
பாசிப்பருப்பு - 2 கப்.
சர்க்கரை -3 1/2 கப்
கோதுமை மாவு -1/2 கப் ( தேவையென்றால் )
ஏலம்- 4
முந்திரி - 1மேஜைக்கரண்டி
நெய் (அல்லது ) சமையல் எண்ணெய்- 2 1/2கப்.
கலர் - சில துளிகள் ( தேவையென்றால் )

செய்முறை :
) பாசிப்பருப்பை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 3 விசில் அல்லது வேகும் வரை விடவும்.
) பின்பு நன்று , குருணையில்லாமல் மசித்துக்கொள்ளவும்.
) பருப்பு சூடாக இருக்கும்பொழுதே , சர்க்கரை சேர்த்து , கரையும் வரை கலக்கவும்.
) அடிப்பாகம் கனமான வாணலியில் நெய் சேர்த்து, கோதுமை மாவை சேர்த்து பச்சை வாடை போய், நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
) முந்திரி சேர்த்து ஒருநிமிடம் வறுத்து, பருப்பு கலவையை சேர்க்கவும்.
) குறைந்த சூட்டில் , அடிபிடிக்காமல் 2 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
) ஏலப்பொடி ,கலர் ,சேர்த்து சுமார் 30 - 45 நிமிடம் கிளறிக்கொண்டே இருந்தால் அல்வா நன்றாக வெந்து, எண்ணெய் விடும்.
) அல்வா திரண்டு , பாத்திரத்தில் ஒட்டாமல் , எண்ணெய் வெளியே வரும் பதத்தில் , அடுப்பில் இருந்து இறக்கவும்.
) சூடாகவோ அல்லது பிரிட்ஜ்ல் வைத்தும் சுவைக்கலாம்.
) 10 நாட்கள் வரை கெடாது.

குறிப்பு :
) அடிப்பாகம் கனமான பாத்திரம் அல்லது நான்- ஸ்டிக் பாத்திரம் உபயோகிக்கவும்.
) கலர் மற்றும் கோதுமை சேர்க்காமலும் செய்யலாம் , கோதுமை அல்வா சீக்கிரம் கெட்டியாக உதவும்.
) எண்ணெய் / நெய் கொஞ்சம் தாராளமாக சேர்க்கலாம் , நான் 2 கப் நெய் , 1 / 2 கப் எண்ணெய் சேர்த்தேன்.


Wednesday 27 September 2017

பன்னீர் ஜலபிரெஜி

TO VIEW IN ENGLISH : CLICK HERE
வணக்கம் ,
பன்னீர் ஜலபிரெஜி நான் அடிக்கடி செய்யும் பேலியோ உணவாகும்.
மேலும் இந்த சைடுடிஷ் சப்பாத்தி , ரொட்டி மற்றும் தோசைக்கும் நன்றாக இருக்கும் , செய்வதும் மிகவும் சுலபம்.
பன்னீர் ஜலபிரெஜி செய்முறை உங்களுக்காக ,


தேவையானவை :
பன்னீர் – 200 கிராம்.
வெங்காயம் – 1 .
இஞ்சி – 1 / 2 ” துண்டு .
பூண்டு – 5 பல்.
பச்சை குடைமிளகாய் – 1 .
சிவப்பு குடைமிளகாய் – 1 .
மஞ்சள் குடைமிளகாய் – 1 .
கேரட் – 1 சிறியது .
வர மிளகாய் – 2 .
தக்காளி – 3 .
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி .
வெண்ணை – 2 தேக்கரண்டி .
கசூரி மேத்தி – 1 தேக்கரண்டி .
கரம் மசாலா – 1 தேக்கரண்டி .
மஞ்சள் பொடி – 1 / 4 தேக்கரண்டி .
மிளகாய் பொடி – 2 தேக்கரண்டி .
மல்லி பொடி – 1 தேக்கரண்டி .
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி .
கருவேப்பில்லை சிறிது .

செய்முறை :
) வெங்காயம் , குடை மிளகாய் ,இஞ்சி ,பூண்டு அனைத்தையும் நீல வாக்கில் வெட்டி கொள்ளவும்.பனீரை சதுரமாக வெட்டிவைத்துக்கொள்ளவும் .


) தக்காளியை அரைத்துக்கொள்ளவும்.


) வாணலியில் 1 தேக்கரண்டி வெண்ணை சேர்த்து ,பண்ணீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும்.வதக்கிய பண்ணீர் துண்டுகளை தனியாக வைக்கவும்.
) வாணலியில் மீதமிருக்கும் வெண்ணையை சேர்த்து , சீரகம் , வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.


) அத்துடன் இஞ்சி ,பூண்டு சேர்த்து ,பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.


) அத்துடன் வெங்காயம் , குடை மிளகாய் சேர்த்து , மிருதுவாக வதங்கும் வரை வதக்கவும் .



) இதனுடன் மல்லி பொடி , மஞ்சள் பொடி , மிளகாய் பொடி சேர்த்து 1 நிமிடம் கிளறிவிடவும்.


) பின்னர் அரைத்த தக்காளி விழுது , உப்பு சேர்த்து ,பச்சை வாடை போய் , மசாலா கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

) பண்ணீர் , கஸோரி மேத்தி , கரம் மசாலா சேர்த்து , பண்ணீர் மசாலாவுடன் கலங்கும்படி கிளறிவிடவும்.
) இறுதியாக எலுமிச்சை சாறு , கருவேப்பில்லை சேர்த்து , பரிமாறவும்.







Sunday 17 September 2017

விருதுநகர் உருளைக்கிழங்கு சால்னா

ஆங்கிலத்தில் காண/ TO VIEW IN ENGLISH : கிளிக் 
வணக்கம்,
விருதுநகர் உருளைக்கிழங்கு சால்னா !! பரோட்டாவிற்கு மிகவும் பிரபலமான விருதுநகரில் சால்னாவும் பிரபலம் தான்.அதன் நிறம் மற்றும் சுவை நாம் வீட்டில் செய்தால் வருவதில்லை.நான் பலமுறை முயற்சி செய்து இந்த முறை வெற்றி கண்டுள்ளேன்.இந்த ரெசிபி விருதுநகர் சமையல் என்ற facebook குரூப்பில் இருந்து எடுத்தேன். சுவையான ,மிகவும் பிரபலமான விருதுநகர் சால்னா ரெசிபி உங்களுக்காகே,
தேவையானவை :
வெங்காயம் – 1 .
தக்காளி – 2 .
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி.
கருவேப்பில்லை ஒரு கொத்து.
மஞ்சள் பொடி – 1 /4 தேக்கரண்டி.
சிக்கன் மசாலா அல்லது கரம் மசாலா – 1 தேக்கரண்டி.
காய்கறிகள் – 1 கப் ( நான் உருளைக்கிழங்கு மட்டுமே சேர்த்தேன் , நீங்கள் தங்கள் விருப்பம்போல் சேர்க்கலாம்).
தேங்காய் – 1 / 4 கப்.
கொத்துமல்லி ஒரு கை.
எண்ணெய் – 1 தேக்கரண்டி .
கடுகு -1 / 4 தேக்கரண்டி.
வறுத்து அரைப்பதற்கு :
நிலக்கடலை – 1 தேக்கரண்டி.
வர மல்லி – 1 தேக்கரண்டி.
வரமிளகாய் – 5 .
கசகசா – 1 / 2 தேக்கரண்டி .
பட்டை – 2 ( 1 ” அளவு ).
கிராம்பு – 3 .
செய்முறை

அ) வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
) வாணலியில் மிதமான சூட்டில் நிலக்கடலை , வரமல்லி , மிளகாய் , பட்டை , கிராம்பு சேர்த்து நன்றாக நிறம் மாறி , நறுமணம் வரும் வரை வணக்கவும்.பின்பு வணங்கிய பொருட்களை பொடியாக அரைத்து கொள்ளவும்.
) வாணலில் எண்ணெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொரியும் வரை வதக்கி , வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

) பின்பு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி , இஞ்சி பூண்டு விழுது , கருவேப்பில்லை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் .

) இப்பொழுது நமது மசாலா பொடிகளை சேர்க்கும் நேரம் , மஞ்சள் பொடி, சிக்கன் மசாலா , வறுத்து அரைத்த மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி , நறுக்கிய காய்கறிகளை சேர்த்து , உப்பு ,3 கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்

) தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துவைத்து கொள்ளவும்.

) சால்னாவில் காய்கறிகள் நன்றாக வெந்த பிறகு , அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.

) இறுதியாக மல்லி தழை தூவி இறக்கி , பரோட்டாவுடன் பரிமாறவும்.

) இந்த சால்னா சப்பாத்தி ,தோசையுடன் சுவைக்கவும் நன்றாக இருக்கும்.

குறிப்பு :
) மசாலா வருக்கும் பொழுது , சிறிது கரு நிறமாக வறுத்தால் நமக்கு ஹோட்டலில் வாங்கும் சால்னா போன்ற நிறம் கிடைக்கும் (ஆனால் கருகிவிடக்கூடாது).
) நான் உருளைக்கிழங்கு  மட்டுமே சேர்த்தேன் , நீங்கள் தங்கள் விருப்பம்போல் சிக்கன் , கேரட் , பீட்ரூட் ,கோஸ் , பட்டாணி ,முட்டை எதுவேண்டுமானால் சேர்க்கலாம்.காய்களை மசிய வேகவைக்க வேண்டாம் வேகும் பதம் இருந்தால்தான் நன்றாக இருக்கும்..
) தண்ணீர் உங்களுக்கு வேண்டுமான அளவு சேர்க்கவும்.

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...