சுரைக்காய் தோசை

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,சுரைக்காய் தோசை! எனது பழைய போஸ்ட்களை படித்தீர்களானால் உங்களுக்கு தெரியும் தோசை மாவு எனக்கு எவ்வளவு முக்கியம் என்று 🙂 .
தோசை மாவு இல்லை என்றால் காலை நேர சமையல் எனக்கு மிகவும் கடினம் ,அதனால் விதவிதமான தோசை மாவு அரைத்துவைத்துக்கொள்வது வழக்கம்.
பிரிட்ஜ்ல் கொஞ்சம் சுரைக்காய் இருந்தது , எனக்கு சுரைக்காய் சாப்பிட்டு அலுத்துவிட்டதால் தோசை செய்து அனைவர்க்கும் கொடுத்துவிட்டேன்.
எனது வீட்டில் தோசை வடிவில் எது கொடுத்தாலும் சாப்பிடுவார்கள் :).
சத்தான , சுவையான சுரைக்காய் தோசை செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
பச்சரிசி – 2 கப்.
உளுந்து -1/4 கப்
சுரைக்காய் – 1 1/2கப் ( நறுக்கியது ).
வரமிளகாய் – 4
பெருங்காயம் -1/8 தேக்கரண்டி.
கருவேப்பிலை – ஒரு கையளவு.
இஞ்சி – 1 ” துண்டு – 1
சீரகம் – 1தேக்கரண்டி.
உப்பு – தேவையானஅளவு.
செய்முறை :
அ) அரிசி மற்றும் உளுந்தை தண்ணீரில் கழுவி ,4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

ஆ) சுரைக்காயினை தோல் சீவி , விதைகளை நீக்கிவிட்டு ,சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய சுரைக்காயினை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |

உ) அரைத்த மாவுடன் , அரைத்த சுரைக்காய் விழுது , வரமிளகாய் மசாலா விழுது,உப்பு சேர்த்து ஒரு முறை நன்றாக கலங்கும்படி அரைத்துக்கொள்ளவும்.
ஊ) மாவை குறைந்தது 4 மணிநேரம் புளிக்கவைக்கவும்.

எ) தோசை கல்லை சூடாக்கி ,சிறிது நெய் தடவி ,ஒரு கரண்டி மாவை மெல்லிய தோசையாக ஊற்றி , சிறிது எண்ணெய் தெளித்து பொன்னிறமாக வேகவிடவும்.

ஏ) தோசையை திருப்பி ,2 நிமிடம் வேகவிடவும்.

ஐ) தோசை வெந்ததும் , சூடாக பரிமாறவும்.
ஓ) வெங்காய சட்னியுடன் பரிமாற அருமையாக இருக்கும் ,நீங்கள் உங்கள் விருப்பம்போல் பூண்டு சட்னி , நிலக்கடலை சட்னியுடன் பரிமாறலாம்.

குறிப்பு :
அ) அரைத்தவுடன் மாவு புளிக்காமலுமும் உடனே தோசை செய்யலாம் ,ஆனால் எனக்கு மாவின் பச்சை வாடை பிடிக்காததால் நான் புளிக்கவைத்து செய்வேன்.புளிக்காமல் செய்தல் அடை பக்குவத்தில் செய்யவேண்டும்.
ஆ) பச்சரிசிக்கு பதில் இட்லி அரிசியும் சேர்க்கலாம்.

No comments:
Post a Comment