கார பூரி

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,எப்பொழுதும் சாதாரண பூரி செய்யும் நமக்கு என்றாவது ஒரு நாள் அந்த பூரியில் எதாவது வித்யாசமாக செய்யலாம் என்று தோன்றும்.
எனக்கு அவ்வாறு தோன்றிய பொழுது இந்த ரெசிபி நினைவில் வந்தது .
இந்த ரெசிபி எனது சகோதரி ஹைதெராபாத்தில் வசித்தபொழுது அவரது தோழி அவருக்கு கற்றுத்தந்த ரெசிபியாகும் .எனக்கு ஒரு முறை சொல்லியிருக்கிறார் அனால் நான் இப்பொழுது தான் செய்தேன் .
சாதாரண பூரியை விடவும் இந்த காரபூரி சுவையாகவும் , வித்தியாசமாகவும் இருந்தது .
காரப்பூரி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
கோதுமை மாவு – 1 1 / 2 கப்.
பெருங்காயம் – 1 / 8 தேக்கரண்டி .
மிளகு – 1 / 2 தேக்கரண்டி.
சீரகம் – 1 தேக்கரண்டி.
வரமிளகாய் – 2 .
கருவேப்பில்லை – சிறிது .
உப்பு – 1 தேக்கரண்டி.
தண்ணீர் – 3 / 4 கப்.
எண்ணெய் – பொரித்து எடுக்க.
செய்முறை :
௧) மிளகு , சீரகம் , மிளகாய் அனைத்தையும் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
![]() |
![]() |

௩) அத்துடன் தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசையவும்.

௪) பிசைந்த மாவை 15 நிமிடம் வைத்து அதன் பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

௫) ஒவொரு உருண்டையையும் சிறிய ,தடிமனான தட்டைகளாக தேய்த்து சூடான எண்ணையில் இருபக்கமும் பொல்லும் வரை பொரித்து எடுக்கவும்.
![]() |
![]() |
![]() |
![]() |


குறிப்பு :
௧) வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்.
௨) உப்பு மற்றும் தண்ணீர் ஒவொரு மாவிற்கும் வேறுபாடும் அதனால் தேவையான அளவு சேர்க்கவும்.
௩) எண்ணெய் நன்றாக சூடான பின்பு பூரியை போடவும் , இல்லையென்றால் பூரி பொல்லாது மேலும் எண்ணெய் பிடிக்கும் .

No comments:
Post a Comment